புத்தகக் காட்சி இலக்கியவாதிகள், வாசகர்கள், பொதுமக்கள் மத்தியில் மாபெரும் திருவிழாவாக நடந்த புத்தகக் காட்சியானது பொருட்செலவு மற்றும் ஆட்செலவில் நடந்து முடிந்தது. இந்தப் புத்தகக் காட்சி சுமார் 900 அரங்குகளை உள்ளடக்கியதாக இருந்தது. இந்தப் புத்தகக் காட்சியிலும் எப்போதும்போல பல விமர்சனங்கள் நிலவி வந்தன. வழக்கத்துக்கு மாறாக, ஜனவரிக்கு முன்னரே, கண்காட்சியை நடத்தியதால் பல விமர்சனங்கள் எழுந்தது. இதைத் தாண்டி சாதி (தீண்டாமை) ரீதியான விமர்சனங்களும் எழுந்தது. ஆனால் யாரும் அடிப்படை தேவையான கழிவறைகளைக் கண்டுகொள்ளவே இல்லை. கழிவறைகள் சுத்தமாகவே பராமரிக்கப்பட்டு இருந்தன. ஆனால் சற்று பருமனானவர்கள் உள்ளே சென்று கதவைத் தாழிட்டு சிறுநீர் கழிக்க முடியாத நிலையில்தான் கட்டமைப்பு இருந்தது. குப்பைத்தொட்டிகளும் சரிவர இல்லாத காரணத்தால் நாப்கின்கள் அப்படியே கழிவறையிலே வீசப்பட்டது. இதையும் தவிர மாபெரும் உழைப்புச் சுரண்டலும் நடை பெற்றது. வாரநாட்களில் 2 மணிக்குத் துவங்கும் புத்தகக் காட்சியில் இரவு 8:30க்கு அரங்குகள் மூடப்பட வேண்டும். ஆனால் அரங்குகள் மூட 9லிருந்து 9:30 வரை ஆகிவிடும். அரங்கு உரிமையாளரை...
Posts
Showing posts from January, 2025