Posts

Showing posts from March, 2021

அவரழைப்பு

 கல்லூரியை முடித்துவிட்டு பேருந்து நிலையத்திற்கு வந்து அமர்ந்து கொண்டு, ஏதோ யோசித்தபடி வானத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். தெளிந்த வானம் எங்கு பார்த்தாலும் ஒரே நீல நிறம் , எனக்கு வானத்தை பார்க்க விருப்பம் இல்லை கீழே தரையையும் , எதிரில் சாலையில் போகும் வாகனங்களையும் பார்த்து கொண்டிருந்தேன் .ஒரு பேருந்து கூட வரவில்லை . அருகிலிருந்த சிறுவன் சாக்லேட்டோடு  தன் அம்மாவுடன் அமர்ந்திருந்தான், தீடீரென வானத்தை பார்த்தேன் வானம் அவ்வளவு அழகாக இருந்தது. சற்று முன் பார்த்த வானமா இது ? என தோன்றியது பஞ்சை பரவவிட்டது போல,அவ்வளவு ரம்மியமான காட்சி .அவனும் அவன் அம்மாவும் கிளம்பிவிட்டனர் பக்கத்தில் யாரும் இல்லை. தரையில் சில எறும்புகள் வந்து சிதறி கிடந்த சாக்லேட் துண்டை தூக்கி சென்றன . திரும்பி வானத்தை பார்க்கும் போது அப்பா நினைவுக்கு வந்தார். இன்றோடு ஒரு வருடம் முழுவதுமாக முடிந்துவிட்டது அவர் பிரிந்து கடைசியாக சொர்க்க ரதத்தில் தான் பார்த்தேன். கண்ணீர் ஒரு துளி கசிந்து கன்னத்தை தாண்டி கீழே ,எறும்பு ஒன்றின் மீது விழுகிறது .தீடீரென ஒரு அழைப்பு எடுத்து காதில் வைத்தேன்  "அப்பா பேசுறேன்  ஹலோ" என்...

மங்கை

 திண்ணைக்கு அருகில் அமர்ந்து  மங்கை குப்பை கீரைகளை கிள்ளிக் கொண்டு இருக்கிறாள்,வெளியே சென்ற கணவன் கொல்லைப்புறம் சென்று கை , கால்களை கழுவி விட்டு உள் நுழைகிறார்."என்னங்க போன வேலை எப்படி" ,"எல்லாம் நல்ல செய்தி தான்டி வேலை கிடைத்தது"."சரி குழந்தைகள் எங்கே ?". "அவங்க விளையாடிட்டு இருந்தாங்க வருவாங்க". குழந்தைகள் இருவரும் வந்தனர் . "வெயில் காலம் முடிந்தது அடுத்த மழை காலம் நாம் குடிசை தாங்குமாங்க" "ம்ம் இரு நாளை பின் புறம் உள்ள ஓலைகளைக்கொண்டு வெய்து கொள்வோம்" .கருமேகங்கள் சூழ்ந்து கொண்டது திடீரென , இவள் சமைப்பதற்கு உள்ளே செல்கிறாள் மேகத்தைபார்த்து ,தீ பற்றுவதற்குள் மழை பெய்ய தொடங்கியது இவள் பெரும்பாடு பட்டு கொண்டு இருக்கிறாள் .சல்லடை போல ஒழுகி கொண்டு இருக்கிறது,அப்போது நம்பிக்கை தரும் விதமாக தீ பற்றி சுள்ளிகள் எரிகிறது. "என்னங்க அந்த ஓரத்தில் இருக்க குடையை எடுங்க ரொம்ப ஓரம் போகாதீங்க ஒரு குட்டி எலி வலை இருக்கு" ,அந்த குடையிலும் அரையணா அளவு ஓட்டை உள்ளது .ஒரு வழியாக சமைத்து முடித்தாள் ."என்னங்க சாப்பிடனும்","ம...

அதிரசம்

  ஊருக்கு நடுவில் ஒரு குட்டி பிள்ளையார் கோவில் , அதுக்கு எதிர் வீடு நாராயணசாமி வீடு . இவர் குடும்பத்தில் தற்போது கொஞ்சம் பணவீக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ஒன்றும் இவருக்கும் ,இவர் குடும்பத்திற்கும் புதிது இல்லை . விவசாய நடுத்தர வர்க்கம் இதை எல்லாம் கடக்க தான் வேண்டும்.  அவர் வீடு சிறியதாக இருந்தாலும், அவ்வளவு அழகாக இருக்கும் வாயிலின் முகப்பில் இரு திண்ணைகள் , நடுவில் முற்றம்  , மூன்று சிறு அறைகள் ,முற்றத்தை சுற்றி தேக்கு மரத்தால் ஆன தூண்கள் எல்லாம் நாராயணசாமியின் அப்பா காலத்தில் செய்யபட்டது. முற்றத்தின் இடப்பக்கத்தில் ஒரு பெரிய செம்மர ஊஞ்சல், முற்றத்தின் நடுவில் துளசி மாடம். மீனாட்சி அதை தினமும் குளித்து முடித்து சுற்றி வருவது வழக்கம். கொல்லைபுறத்தில் கிணறும்  ,வாழை மரமும் இருக்கும் . நாரயாணசாமிக்கு ஒரு அரைக்காணி விவசாய நிலம் உள்ளது ,மாலை பொழுதில் நிலத்தில் இருந்து வீடு திரும்பினார் . "மீனாட்சி எங்க இருக்க கொஞ்சம் குடிக்க தண்ணீ வேணும் "  என்றபடி உள்ளே சென்று தன் மனைவி மீனாட்சியை அழைத்தார். "இதோ வரேன்ங்க " கொள்ளை புறத்தில் இருந்து வந்து, தண்ணீர் கொண்டு வந்தாள் . "வ...

அப்பா

  கார் இருளில் ..! கண்கள் காரணமின்றி, வழிய தொடங்கியது ...! மனம் மயலிட்டது ..! உன்னை ...! ஊரறிய உனக்காக ஒரு துளி கண்ணீர் கசிந்தது இல்லை ..! நான் சிந்தும் கண்ணீரை ஊரறியேன்...! உன் மடி மெத்தை மறந்தது ..! உன் குரல் காற்றோடு.. கரைந்து கலந்து போனது..! வீட்டிற்கு வருகிறேன் என்றாய்.. வரவில்லை இன்றும்..!! வருகையை வாசலோடு .. எதிர் நோக்கினேன்..! வந்தாய் வெண்ணிற ஆடையில்...!! பிரேதம் என்ற புது பெயரோடு...!! அந்த நொடி கல்லாய் போனேன்...!! ஓர் இரவு தனிமையில்... உன் வருடலை நன்கு உணர்ந்தேன்...!! சத்தம் போட்டால் மறைந்துவிடுவாய் என.. மௌனம் காத்தேன்...! வெளியில் சொன்னால் பொய்யாகி விடுவாய் என சொல்லவில்லை.... யாரிடமும் இன்றும்...!! வீட்டிற்கு வர வழி மறந்தாயோ...? காணா தேசம் சென்றாயோ...?? சில நேரம் உன் குரல் பித்து கொண்டு ... ஏமாற்றத்தோடு திரும்புவேன்...!! காய்ச்சலோடு கட்டிலில் இருந்தேன்... வருவாய் என...!! வரவில்லை ...!! காய்ச்சலை காணவில்லை..!!!  உன் உதிரத்தில் உதிர்த்தவள்..!! அழைக்கிறேன் வருவாயா..?? உறக்கத்தை விடுத்து உட்கார்ந்துள்ளேன்...!